Pages

Tuesday, November 15, 2011

என்னதான் பண்றது???

எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல...ஒரே படபடப்பா இருக்கு...என்ன நினைக்கவே பயம்மா இருக்கு...என்ன பண்றதுன்னே தெரியல....என்ன பண்றது????

பதிவு எழுத ஆசை...வந்து லப் டொப்ப எடுத்தாச்சு...ஆன் பண்ணியாச்சு...ஆனா என்ன எழுதுறது?தெரியலையே....நானெல்லாம் டைப்பண்ணத் தெரியும்கிறதுக்காகவே பதிவெழுத ஆரம்பிச்ச ஞான சூனியங்கள்..இதெல்லாம் வெளங்கிடும்னு யாரும் திட்டமாட்டிங்க என்றதால இப்பிடி...ஹப்பாடா!ஒரு பந்திய முடிச்சாச்சு...


எனக்கு என்ன செய்றது..இதவிட்டா வேற வழியே தெரியல.. நானும் என்னெல்லாமோ பண்ணிப்பார்த்திட்டன்..முடியலையே...எதையும் செய்யமுடியாத தவிப்போட,வேதனையோட இந்தப்பக்கம் வந்திருக்கேன்...யாரும் ஏமாத்திடாதிங்க..நல்ல உள்ளங்கள் கோவிச்சுக்காதிங்க..எப்பிடில்லாம் ஓட்டவேண்டியிருக்கு...இதெல்லாம் வீர வாழ்க்கையில சகஜம்தானுங்களே...

நானும் புத்தகம்தான் படிக்கலாம்னு நினைச்சன்...முதல்ல என் கையில அம்பிட்டது "உலகிலே அதிகமான தமிழர்கள் படிக்கும் நாவல் " அது என்னனு கேக்கிறிங்களா? ரமணிச்சந்திரன் நாவல்...அப்புறம் விளங்குமா?அந்தம்மாவே அரச்ச மாவ அரச்சிட்டு இருக்கு...அப்புறம் நாம என்னத்த?பேரைக்கூட அறப் பழசாவே வைக்குது..அதையாவது மாத்தினாலும் கொஞ்சம் பரவால்ல....அதனால நெக்ஸ்டு...


அதனால படம் பாக்கலாம்னு உக்காந்தேன்...முன்னெல்லாம் ராத்திரில கண்முழிச்சு பார்த்திட்டு,காலையிலும் பார்ப்பேன்..இப்ப என்னத்த சொல்றது...இரண்டரை மணித்தியாலப் படத்தை ஒரு மணித்தியாலத்தில் பார்க்கும் சாதனை என்னையே சேரும்...எதுவுமே சரியில்லைங்க..விஜய் ட்ரெயின நிப்பாட்டுறதென்ன? சூர்யா சிக்ஸ் பக்க காட்டுறதென்ன? தனுஷ் பாடுறதென்ன? ஹன்சிகா நடிக்கிறதென்ன?ஸ்ருதி டமிழ் பேசுரதென்ன? என்ன?என்ன?என்ன? நெக்ஸ்டு...


நெட்டில ஏதாவது நல்லதா பாக்கலானா....
  • ஐஸுக்கு அபிஷேக்கின் சிசேரியன்
  • தீபிகாவை அம்பானியிடம் அனுப்ப மல்லையா ஆலோசனை
  • கிரிக்கெட்டர்கள் பள்ளித்தோழியை மணப்பதன் பின்னணியில் பென்சில் சண்டை
  • ஆன்டிகளை மணப்பதில் யுத்துகள் தீவிரம் -நேரடி அலசல்

வெளங்குமா? நம்மள உருப்படவே விடாதுங்க ஒலகம்..

"இல்லன்னா...நீங்க உருப்பட்டுடுவிங்க...ம்கும்.."
மைன்ட் வொயிஸ் கேக்கிறாப்ல பீலின்க்...
நானெல்லாம் சுட்டு போட்டாலும் திருந்தமாட்டான்..ஸ்டாப்...அதென்ன சுட்டபிறகு திருந்திறது??சுட்டா செத்துடுவான்..இல்ல சுட்டவன் பழிவாங்க கிளம்பிடுவான்...புதுசா...புதுசா....புதுசாஆஆஆ...நானெல்லாம் அப்பா காச நெட் பில் கட்டி அழிச்சாலும் திருந்த மாட்டேன்..ஒத்துக்கிறன்..இதெல்லாம் வீர வாழ்க்கையில சகஜம்தானுங்களே????

யாரும் தப்பா எடுத்துக்கப்படாது...மனசே சரியில்...புலம்ப ஆளில்ல...அதான் கொஞ்சம் பொலம்பிட்டன்...கோவிச்சுக்காதீக மகா ஜனங்களே......


#########################################

1 comments:

sathishsangkavi.blogspot.com said...

இப்படித்தான் இருக்க வேனும் புலம்பல்....

Post a Comment