Pages

Sunday, November 13, 2011

எனக்குப் பிடிக்குமா?இல்ல புடிக்குமான்னு கேக்கிறன்?

என்னங்க இது...லூசுத்தனமா அடியும் இல்லாம முடிவும் இல்லாம ஒரு கேள்வி கேக்கிறிங்க...எப்பவும் இப்பிடியா?இல்ல இன்னைக்குத்தான் இப்பிடியா?இல்ல...ஏதும் பிரச்சினையில இருக்கிங்களா?எதுவா இருந்தாலும் தெளிவா கேக்கணும்...எதையும் பிளான் பண்ணி யோசிச்சு கேக்கணும் அப்பிடின்னு சொல்றிங்களா?


இன்றுதான் ஞாயிற்றுக்கிழமை...அட!பொண்ணு கண்டுபிடிச்சிருச்சே...
புத்திசாலிதான்னு யாராவது மனசுக்குள்ள நினைக்கிறிங்களா?அட போங்க...எனக்கு தெரியும் ஞாயிறு இன்னைக்குன்னு....இந்தாம்மா!ஞாயிறு இன்னைக்கு மட்டும் புதுசில்ல...வாரத்தில ஒருநாள் ஞாயிறு வரத்தான் செய்யும்...புதுசா கண்டுபிடிச்ச மாதிரி பேசுறியே..அப்பிடின்னு நினைக்கிறிங்களா?நினைச்சுக்கோங்க...விஷயம் அடுத்த பந்திக்கு நகர்கிறது.....




விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை எல்லாரும் விரும்புவாங்க...நாம வித்தியாசமில்ல...அதனால எனக்கு புடிக்கவே புடிக்காத நாள் இந்த அருமையான ஞாயிற்றுக்கிழமைதான்..ஏன் தெரியுமோ?ஒரு நாளும் இல்லாத மாதிரி இன்றைய நாளில்தான் எனக்கு பிசியான நாள்...வழமையா ரொம்ப ரொம்ப வெட்டியா இருப்பேன்...காலேஜ்க்கு  அப்பப்பதான் போவேன் .. விருப்பமான நேரம் காலேஜ்குப்போய் அங்குவரும் பிசாசு வாத்தியாரம்மாகிட்ட  அப்பப்ப நல்லா சக்கரப்பொங்கல்,வடை,பாயாசம் எல்லாம் ப்ரீயா வாங்கிப்பேன்..மற்றும்படி மேடம் பிரீயாத்தான் இருப்பாங்க...டுவிட்டர்,பேஸ்புக் உலகில்தான் ரொம்ப வேலை இருக்கும்...மத்தபடி வெட்டியோ வெட்டி....

ஆனால்,இந்த ஞாயிற்றுக்கிழமை இருக்கே...என்ன சந்தோசமா வாழவிடுதா?எப்பபாரு என் லைனில் தேவையில்லாம என் லைனைக் க்ரோஸ் பண்ணுது..இருடி..ராஜாத்தி..ஒரு நாளைக்கு என்கிட்ட மாட்டாமையா போவ...அப்ப பாத்துக்கிறன்....எப்பிடில்லாம் வாழக்கூடாதுன்னு நினைக்கிறனோ அப்பிடில்லாம் என்ன வாழ விடுது இந்த நாள்...பொல்லாத ஞாயிறு....என் புளைப்பக் கெடுக்கும் ஞாயிறு...

எங்கப்பா நான் சட்டம் படிச்சு கிழிக்கிறது போதாதுன்னு,என்ன மனிதவள முகாமைத்துவக்கற்கையும் படிக்கச்சொல்லிட்டார்..பொண்ணு படிக்கிறதில அக்கறையுள்ள மனுஷன்..பொண்ணுக்கு பொறுப்பிருந்தால் பரவால்ல....ம்ஹூம்.....அதுவும் பெரியதொரு கல்லூரியில்...அங்க ஏகப்பட்ட சட்டதிட்டம்..அட்டெண்டன்ஸ் கொஞ்சம் மிஸ்ஸானாலும் ரிசல்ஸ் புஸ்வாணமாகிடும்.. நம்ம ஜின்க் ஜிக்கா வேலையெல்லாம் பண்ணமுடியுமா?இல்ல முடியுமா??
இல்லையே...அதுதானே இந்த பொலம்பல்...

இன்னைக்கு ஞாயிறு என்றதும் நேற்றிரவே எனக்கு லேசா வயித்துக்குள்ள என்னமோ பண்ணிச்சு...வழமையா பன்னிரண்டு மணிக்கு தூங்கி,மானிங் ஒன்பது மணிக்கெல்லாம் எந்திரிக்கிற பொண்ணு அலாரம் எல்லாம் வச்சுட்டு நேரத்துக்கு தூங்கியாச்சு.ஆனா பழக்கதோஷம் விடுமா விடாதே....
அலாரம ஆப் பண்ணிட்டு தூங்கிட்டா.என்னவோ நல்ல காலம் எழும்பி பார்த்தா ஏழு மணி..அரக்கப் பறக்க எழும்பி குளிப்பமுன்னு பார்த்தால்...அங்கயும் பிரச்சினை....தலைக்கு எண்ணையையை காட்டியே இராத பொண்ணு நேற்றுதான் என்னமோ ஆசையில தலைக்கு வச்சிருந்தது...அப்பிடியே குளிச்சிட்டு போக முடியுமா?இல்ல போக முடியுமா?த்ரீ குவாட்டரும், ஸ்லீவ்லெசுமா, விரிச்ச தலையுமா வரும்  பொண்ணுங்க எல்லாம் என்ன அப்புறம் "எங்கேயும் எப்போதும்" அனன்யாவ பார்க்கிறமாதிரி பார்க்கமாட்டாங்க???எல்லாம் என் ஞாயிறு விதி...

அப்புறமா தலைக்கு ஷம்போ  போட்டு அவசர அவசராமா குளிக்கவே அரைமணி நேரம் ஆச்சு ..எனக்கு தலைக்கு குளிக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம்...நிறைய நேரம் ஷவருக்கு கீழே நின்னிடுவன்...அப்புறம் வெளிக்கிட்டால் எட்டுமணி பத்து நிமிஷம் கடந்திருந்தது...இதில ஒரு சிங்கிள் காப்பிகூட இல்ல..காப்பிக்கே வழியில்லாத நேரம் சாப்பாடு கிடைக்கும்???கிடச்சிட்டாலும்...தனிமை வாழ்க்கை கொடும...இப்பிடியான நேரம் கடுமை ..

அப்புறம் நடந்து போய் பஸ் எடுத்து அங்கிருந்து வகுப்புக்குபோய் சேர்ந்தால் ஒன்பதுக்கு ஐந்து நிமிடம் இருக்கு..அப்பத்தான் மூச்சே விட்டிருப்பன்...சீரியசாத்தாங்க...

அப்புறம் பத்து அரைக்கு டீ ப்ரேக் ..பன்னிரண்டு மணிக்கு லஞ்ச் ப்ரேக்..அதில வீட்டில கொட்டிக்கிற மாதிரி கொட்டிக்க  முடியுமா?ஸ்டைலா ஒரு பேகர்..அதுவும் ரொம்பச் சின்னது...அப்புறம் மூணு மணிக்கு டீ ப்ரேக்...எல்லாம் சரிதான்...ஆனா உக்காந்திருக்கிறது இருக்கே கொடும சரவணா...எப்பிடித்தான் நம்மாளுங்க வேல பாக்கிறாங்களோ?நாலு மணிக்குதான் ரிலீஸ் பண்ணுவாங்க......


ஹப்பாடா..அப்புறம் பஸ் புடிச்சு வீட்டுக்கு வந்தா பொண்ணு களச்சு வந்திருக்காளேன்னு காப்பி கொடுக்க அம்மாவோட வீட்டிலா இருக்கோம்...வாளில தண்ணிய புடிச்சு,நம்ம கையால தண்ணி ஊத்தி குளிச்சு,நம்ம கையால தண்ணி வச்சு,காப்பி கலந்து குடிச்சாதான் உண்டு...அப்புறம் நாளைக்குத்தான் எந்திரிப்பேன்..பசிக்கிற நேரம் ஒரு மகி....அதுவும் நம்ம கையாலதான்..இதுக்கெலாம் வாடைக்கு கைய வச்சுக்க முடியுமா?


நீங்களே சொல்லுங்க....இப்பிடிப்பட்ட ஞாயிறு எனக்குப் பிடிக்குமா?பிடிக்கத்தான் செய்யுமா?

அடுத்த ஞாயிறு வராம ஸ்ட்ரெயிட்டா திங்கள் வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்???


########################################################

2 comments:

SURYAJEEVA said...

இன்னிக்கு வெயில் ஜாஸ்தியோ

ம.தி.சுதா said...

ஐயோ வாரத்திலயே ரொம்ப பிசியான நாள் இந்த ஞாயிறு தானே..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

Post a Comment