QUEEN!
தலை நகரங்களில் படித்து உழைக்கும் பெண்ணாய் வாழும் நமக்கு கட்டுப்பெட்டித்தனமாய் வாழும் பெண்களின் நிலையும், அவர்களின் மனக்குமுறல்களும், அவலங்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...ஆனாலும் தெருவிலோ, உறவிலோ அப்படியொரு பெண்ணை சந்திக்கையில் அந்தப் பெண்ணின் இயல்பும், பழக்கவழக்கங்களும் நமக்கு புதுமையாய் யோசிக்கவைக்கும்.
சில நேரம் நமக்கொரு கவலை, வீட்டில் "பொம்பிளைப்பிள்ளையாய் அடக்க ஒடுக்கமா இருக்கவேணாமா" என்ற கேள்விகள் முளைக்கையில் நாமும் சிந்திக்கிறோம்......
"பொண்ணுன்னா சும்மாவா????" இந்த ஆண்கள்தான் நம்மை தலைமை தாங்க வேணுமா? பெண் என்பவள் ஆணை சார்ந்து நிற்பவள் என்பது பல வருடகாலமாய்...ஏன் பல தசாப்தங்களாய் நிலைத்துநிற்கும் ஒன்று..
"பொண்ணுன்னா சும்மாவா????" இந்த ஆண்கள்தான் நம்மை தலைமை தாங்க வேணுமா? பெண் என்பவள் ஆணை சார்ந்து நிற்பவள் என்பது பல வருடகாலமாய்...ஏன் பல தசாப்தங்களாய் நிலைத்துநிற்கும் ஒன்று..
#################################################################################
ஓர் திருமண வீடு.....
நெடுநாள் காதலர்கள் மணம் புரிய இருக்கும் வேளை...
பெண்வீட்டில் எல்லோரும் ஆர்ப்பாட்டமும், மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு காதலன் காதலியிடம் சொல்கிறான் நாம் திருமணம் பண்ணமுடியாது!!!
லண்டன் போய் படித்து உழைக்கும் ஆணுக்கு இப்போ இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை பிடிக்கவில்லையாம்.....
"நான் உனக்கேற்றபடி மாறுகிறேன்,நீ சொல்லும்படியெல்லாம் கேட்கிறேன் "என்று கெஞ்சி கதறுகிறாள் நாயகி...
பயனில்லை...
நெடுநாள் காதலர்கள் மணம் புரிய இருக்கும் வேளை...
பெண்வீட்டில் எல்லோரும் ஆர்ப்பாட்டமும், மகிழ்ச்சியாய் இருக்கும் நேரம் திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு காதலன் காதலியிடம் சொல்கிறான் நாம் திருமணம் பண்ணமுடியாது!!!
லண்டன் போய் படித்து உழைக்கும் ஆணுக்கு இப்போ இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை பிடிக்கவில்லையாம்.....
"நான் உனக்கேற்றபடி மாறுகிறேன்,நீ சொல்லும்படியெல்லாம் கேட்கிறேன் "என்று கெஞ்சி கதறுகிறாள் நாயகி...
பயனில்லை...
திருமணம் நின்றது!!!!
தன் கணவனோடு தான் போய்ப் பார்க்கவிரும்பிய அந்த அழகான நகரத்திற்கு ஹனிமூன் டிக்கெட் எடுத்துவைத்திருந்த நாயகியின் மனம் டிக்கெட்டிலே உழன்றது. தன் நெடுநாள் ஆசையின்படி தான் ஹனிமூனிற்கு போக ஆசைப்பட்ட டிக்கெட்டில் பாரிஸ் போகிறாள்.
கலாசாரத்தோடும், குடும்பக் காவலிலும் அடைபட்ட பெண் வெளியூர் காற்றை சுவாசிக்கிறாள்....
கலாசாரத்தோடும், குடும்பக் காவலிலும் அடைபட்ட பெண் வெளியூர் காற்றை சுவாசிக்கிறாள்....
மற்றவர்கள் நம்மை பார்த்துக்கொள்ள இருக்கிறார்கள் என்ற நிலை மாறி தன் காலில் நிற்க முற்படும்போது வரும் தைரியம் எதற்கும் துணியும்..புது மனிதர்களையும், அவர்கள் பழக்கங்களையும் பார்க்கும் நாயகிக்கு தைரியம், வாழ்வின் நிதர்சனம் புரிகிறது...




.jpg)


.jpg)

.jpg)
.jpg)



.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)




.jpg)


.jpg)
.jpg)














