Pages

Sunday, February 19, 2012

உனக்கு மட்டுமே நீ ரோல்மாடல்....

நீ நல்லவள்
நீ வல்லவள்
நீ ரொம்ப பெரியவள்
நீ ரொம்ப கெளரவமானவள்
உனக்கு நீதான் ரோல்மாடல்....

இப்பிடின்னு ஒவ்வொருத்தரும் நினைப்பதில் தப்பே இல்ல..இப்பிடித்தான் நாட்டில நிறையப்பேர் நினைத்துக்கொண்டு திரிகிறார்கள்...
நீங்க நினையுங்க...நல்லா நினையுங்க..
அதில எந்தப் பிரச்சினையும்  இல்ல...ஆனா மத்தவங்களும் இப்பிடிதான் நினைப்பாங்கன்னு நினைக்கிற உங்களோட நினைப்பு ரொம்ப முட்டாள்தனமானது...


இப்பெல்லாம் எல்லாரும் ரொம்பவும் படிக்கிறாங்க..நல்லா சம்பாதிக்கிறாங்க..கொஞ்சமா படிச்சாலே தலைக்குமேல ரொம்ப கனம் கூடிடுது..ரொம்பப் படிச்சா...ரொம்ப சம்பாதிச்சா...எவ்வளவு கூடும்???என் கால்ல நான் நிக்கிறன்..எனக்கு யாரு வேணும்?என்னால என்னப் பாத்துக்க முடியும்...அப்போ நான் கிரேட்தானேன்னு ஒரு எண்ணம் வந்திடும்...அதுதான் கனம் கனமா மாறும்... அப்புறமா தங்கள ஒரு ஸ்மார்ட் வுமென்னு /மென்னு நினைச்சுப்பாங்க...அதுதான் சிக்கலே..


நமக்கு எப்பவும் நாம நல்லவங்கதான்..நமக்கு எல்லாம் தெரியும்..நம்மளமாதிரி வருமான்னுதான் நாங்க நினைப்போம்...ஆனா நினைப்பெதெல்லாம் நிஜமாகிடுமா?

நீங்க உங்களுக்கு நல்லவங்களாவே இருங்க...அதப்பத்தி யாருமே கவலைப்பட மாட்டாங்க...ஆனா நீங்க மத்தவங்க பக்கம் உங்க பார்வைய திருப்பும்போதுதான் பிரச்சினையே...

என்னப் பாருங்க..நானும் உங்களமாதிரிதானே...நான் எப்பிடியிருக்கே ன்...
என்னப்பாத்து நடங்களேன்னு ஆரம்பிச்சு நம்ம குறைகள்,குற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாய்  அடுக்கப்படும்...
அது நம்மளோட குறையில்ல...ஆனா நம்மளோட குறையா அவங்க நினைச்சுப்பாங்க...என்ன கொடும சரவணா இது???

இதெல்லாம் பழைய காலத்து ஆட்கள் அதாவது நம்ம பெரியவங்க சொல்ற டயலாக்ஸ்னு நினச்சா அதுதான் தப்புங்கிறேன்...
இந்த யூத்துகள்தான் இப்பிடி...நம்ம பெரியவங்க ரொம்ப நல்லவங்க...

உங்களுக்கு நீங்க ரோல்மாடலாவே இருங்க..அது ரொம்ப நல்லது..ஆனா மத்தவங்களுக்கும் நீங்க ரோல்மாடலா இருக்கணும்னு நினைக்காதிங்க..அது அவங்களுக்காவே தோணனும்..உங்க நடத்தைகள் ஒவ்வொன்றுமே அதை தீர்மானிக்கும்...உங்க செயல்கள் செய்யவேண்டியத உங்க வார்த்தைகள் செய்தா அதுக்கு மரியாதையும் இல்ல..பலனும் இல்ல...ஆக நீங்க சொல்ற ஒவ்வொன்றும் உங்களை கீழ்தான் தள்ளிவிடும்....

நமக்கு நாம நல்லவங்களா இருப்போம்...மத்தவங்களுக்கு நல்லது செய்யணும்னா,செய்யமுடியும்னா செய்வோம்...
அது நல்லது..

அதைவிடுத்து  நல்லதுசெய்றதா காட்டி மத்தவங்கள காயப்படுத்துவது ரொம்ப மோசமான பாவ காரியம்..

நம்ம சின்னப் புன்னகையே மத்தவங்கள காயப்படுத்தக்கூடாதுன்னு சொல்ற நேரம் நாம வார்த்தைகளால் குத்திக் கிளறினால்?

வாய்க்கு வந்தபடி நாம கதைக்கிற வார்த்தைகளைப்போல வலிக்கச்செய்றது ஒண்ணுமே இல்ல...

அந்தக் கண்ணீர் தரும்  வலி தாங்கமுடியாதது...
அதை  நாம எதுக்கு மத்தவங்களுக்கு கொடுக்க நினைக்கிறோம்?

இனியாவது உங்களுக்கு நல்லவங்களா இருக்கிற நீங்க மத்தவங்களுக்கும் நல்லவங்களா இருக்கப்பாருங்க....

############################################




3 comments:

Anonymous said...

இனியாவது உங்களுக்கு நல்லவங்களா இருக்கிற நீங்க மத்தவங்களுக்கும் நல்லவங்களா இருக்கப்பாருங்க....
narukku..

Anonymous said...

அருமை அருமை ..:):) ரொம்ப பாதிப்போ ?

Anonymous said...

Seems you come across some incident in your live recently.can u explain one please

Post a Comment