Pages

Monday, December 12, 2011

ஒஸ்தி - இது நாஸ்தி....

ரொம்ப பில்டப்புடன் ஒட்டுமொத்த இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் வெளிவந்த படம்தான் இந்த ஒஸ்தி.சிம்பு போலிஸ் வேடம் ஏற்று நடிக்கும் படம் என்பதும்,தரணியின் இயக்கம் என்பதும்,ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான "டபாங்" படத்தின் ரீமேக் என்பதும் படத்தின் மேல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.மல்லிகா ஷெராவத்தின் கலசலா ஆட்டத்திற்காகவே யூத்துகள் பெரிதும் எதிர்பார்த்த படம் இந்த ஒஸ்தி.

எதிர்பார்ப்புக்கள் நிறைவேறினால் அந்த எதிர்பார்ப்பிற்கு மரியாதை இருக்காதே?

அதனாலேயே ஒஸ்தி மாமு சறுக்கிடிச்சு மாமு!!!!!!!!!!!!!!!!


கொஞ்சமே லாஜிக் இல்லாத இந்த ஒஸ்தி எனெக்கென்னவோ காமெடிப்படம் மாதிரியே இருந்துச்சு...டைரெக்டர் தரணிக்கு இப்போ என்னதான் ஆச்சு..சிம்புவ கோவிச்சு பயனில்ல.அவருக்கு மல்லிகாவையும்,ரிச்சாவையும் பார்க்கவே நேரம் சரியா இருந்திருக்கும்...டிரெக்டர் சார் யார பாக்குறாரு??

(ஆரம்பத்திலே இப்பிடி சொன்னா நீங்க பின்னாடி வாசிப்பிங்க??அவ்வ்வ்வ்!!!)


ரேவதியோட பையன் சிம்பு..நாசரோட பையன் ஜித்தன் ரமேஷ்...சிம்புக்கு ரமேஷ் தம்பி..இப்போ சிம்புக்கு நாசர் என்ன முறை?
அப்பா....ஐ மீன் ரேவதியோட செகண்ட் ஹஸ்பன்ட்தான் நாசர்..

சிம்புவிற்கு அப்பா நாசரையும் தம்பி ரமேஷையும் பிடிக்காது...அந்தப்பக்கமும் அப்பிடியே...எப்பபாரு சண்டை சச்சரவு...இவங்க சண்டையில ரேவதி பாடு திண்டாட்டம்தான்...

சின்ன வயசில நல்ல புள்ளையா இருந்த ரமேஷ் உருப்படாம நிர்மலா( சரண்யா மோகன்)பின்னாடி சுத்தி திரியுறாரு...தறுதலையா இருந்த சிம்பு இன்ஸ்பெக்டர் ஆகிடுறார்...

அப்புறம் டண்டணக்கா.....டனக்க நக்கா.......


பொக்செர் சோனுசூட் இடைத்தேர்தலில் ஜெயிக்க தில்லாலங்கடி வேலையெல்லாம் செய்றாரு..அதை ஒஸ்திவேலன் முறியடிக்கிறாரு...

ஒஸ்திவேலன ஜெயிக்கிறதுக்காக அண்ணன் -தம்பி சண்டையில மூக்கை நுழைத்து எரியிற எண்ணெயில நெருப்பை மூட்டிவிடுராறு சோனுசூட்..

அப்புறம் வழக்கமான திருந்தல் படலம்தான்....


எல்லாம் ஓகே...ஹீரோயின விட்டுட்டிங்களே என்று யாரவது கேட்டால்??
ஹீரோயின் ரிச்சா...அதிஸ்டக்காரப்பொண்ணு..."மயக்கம் என்ன" தனுஷ் ஹீரோயின் என்றதாலே சிம்பு தன் பக்கம் இழுத்துக்கிட்டாரு...பொண்ணுக்கு இடுப்ப காட்டுறதுதான் வேலை...கொடுத்த வேலைய நல்லா காட்டி  காட்டி  காட்டி செய்திருக்கு...
வேற என்ன?பார்க்க அழகாவும் இருக்கு...உதடும்,கண்ணும் பிளஸ்தான்..பொளச்சுக்கும்......

தனுஷ்கூட நடிச்ச பொண்ணு இங்க நாலுவார்த்தை பேசிட்டுப் போகுது...


படத்தில பிடிக்காத விஷயங்கள் ஒண்ணா ரெண்டா சொல்றதுக்குக்கு..இருந்தாலும் சிலது...

சிம்பு ஒரு லா....போட்டா போதாதா..எத்தனை லா....எரிச்சல்தான் வருது....
சில நேரம் அவருக்கேயுரிய வில்லங்கமான பேச்சுக்களுக்கும் குறைவில்ல..ஸ்ட்ரிக்டான போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு பதிலா சிரிப்பு போலீசா நடிச்சிருக்கிறாரு...முடில...

ஜித்தன் ரமேஷ்...இன்னும் அப்பிடியே.....பையனுக்கு நடிப்பு வருமா வராதா?கொஞ்சமும் நடிச்ச மாதிரியே தெரியல...இனி இப்பிடிஎதும் மொக்க சான்ஸ் வந்தாதான் உண்டு....

சந்தானம் நகைச்சுவையில் மட்டுமே படம் ஓடியிருக்கு...அதிலும் சில இடங்களில் முடியலடா டேய்.....கவுண்டமணிய பின்பற்றுறார்..


வாடி வாடி என் கியூட் பொண்டாட்டி பாட்ட ரொம்ப எதிர்பார்த்தா......
(யாருப்பா அந்த டான்ஸ் மாஸ்டர்???)


சிம்பு வழமை போலவே ஹீரோயின ரொம்ப ரசிச்சிருக்காரு.....



கலசலா ரொம்ப முக்கியமான பாட்டுன்னு மல்லிகாக்க்கு கோடிக்கணக்கில கொடுத்து ஆடவச்சா....
இந்தப்பாட்டுக்கா அந்த பில்டப்பு....(முடியலடா சாமி..)
ஆனாலும் சிம்புக்கு ரொம்ப நல்ல மனசு...வில்லனோட மல்லிகாவ ஆடவைக்க ஒரு நல்ல மனசு வேணாமா?


ஆனாலும் காக்கி யூனிபோர்ம இப்பிடி கேவலப்படுத்தியிருக்கவேணாம்....


ரிச்சா அப்பா எதுக்கு செத்துப்போறாரு??இப்பிடில்லாம பொண்ணுங்க அப்பாக்கள சாகடிக்கப்போறானுங்க???(நல்லா யோசிக்கிறாங்கப்பா...)


சிம்பு கண்ணாடிய சேர்ட் கொலருக்கு பின்னாடி மாட்டியிருப்பதும்,அதுக்கு சொல்ற ரீசனும் ரொம்ப ஓவருஊஊஊஊ....

விஜயகுமார் வந்திட்டுப் போறாரு...நிறையப் பேரு வந்து வேஸ்டாகியிருக்காங்க...(பாவம் பய புள்ளைக......நம்பி ஏமாந்திட்டுதுக...)

சிம்பு தனுஷோட நல்லுறவ விரும்பிறாரா???இல்ல கிண்டல் பண்றாரா??
"யாத்தே யாத்தே " பாடல் வருது...ரமேஷ் அந்தப் பாட்டுக்கு ஆடுறது என்ன??..(ஏதும் காமெடி பண்றாரோ???)





ரேவதி -எப்பிடி இருந்த ரேவதி இப்பிடியிருக்காங்க?பாவம்...ரொம்ப மோசமான மாதிரி இருக்கு...நாசர் - சிம்பு  சீன் டச்சிங்....
இந்தப் படத்தில ஹீரோயின் ரிச்சா இடுப்புல ஒரு தங்கக் கயிறு மாதிரி கட்டியிருப்பாங்க..


நம்ம சில்க் சுமிதா இத அப்பவே கட்டிற்றாங்க...இப்ப ஹிந்திலகூட இந்த பாஷன் வந்திருச்சு...இனி நம்ம பொண்ணுங்ககிட்டையும் பாக்கலாம் போல...



சிம்புவ பொதுவா பொண்ணுங்களுக்கு பிடிக்காது..."விண்ணைத் தாண்டி வருவாயா" வில் நல்ல பிள்ளையாகி சிலர் மனதில் இடம் பிடித்தார்...
இப்போ மறுபடியும் புத்திய காட்டிற்றார்...அவரா இவரு???இவரா அவரு???


மொத்தத்தில் ஒஸ்தி நாஸ்தி....


#######################

0 comments:

Post a Comment